குழந்தைகள் வரையும் ஓவியத்தை உற்று நோக்கினால், பறவைகள் சில பறந்து கொண்டிருக்கும், மலைகள் முக்கோணமாக உயர்ந்திருக்கும், நதிகள் நீல வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கும். இவற்றிலெல்லாம் ஏதோவொரு ஒழுங்கு மறைந்திருக்கும். ஆனால் பச்சை நிறத்தில் மரங்களும் செடிகளும் கொடிகளுமென காடுகள் ஒழுங்கற்று கிறுக்கப்பட்டிருக்கும். இந்த பூமி குழந்தைகள் வரைகிற ஓவியமாக பத்திரப்படுத்தப்பட வேண்டுமென்பது வாழை குமார் போன்ற சூழலியலாளர்களின் அக்கறை.
- கவிஞர். சக்திஜோதி
நீர்ப் பறவைகள், ஊர்ப் பறவைகள், மலைப் பறவைகள், பனிப் பறவைகள், புல்வெளிப் பறவைகள், சதுப்புநிலப் பறவைகள், மேற்படி எல்லா சூழ்நிலைகளையும் தகவமைத்து வாழ்கிற பறவைகளும் என இப்பூமியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய 1400 பறவைகளும் தமிழகத்தில் 510 பறவைகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பறவைகள் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அழிந்துபோன பறவைகள் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கக்கூடும். வெறும் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவிற்குள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிற பறவையினங்களும், ஆண்டுக்கு சுமார் 30000 கிலோமீட்டர் வரை பறந்து வாழ்கிற பறவைகளும் இவ்வுலகில் உண்டு. காலை நடை உடலை உறுதி செய்கிறது. பறவை நடை மனதையும் சேர்த்தே உறுதி செய்கிறது. காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை இரண்டு மணி நேர பறவை நடையில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை இனங்கண்டு உறுதி செய்யலாம். பொதுவாக மனித குடியிருப்புகளையொட்டி இருக்கும் பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படக்கூடியவை. அவை ஊர்ப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் இந்தியா முழுமையும் விரிந்திருக்கின்றன. தொடர்ந்து பறவ...
Comments
Post a Comment