Skip to main content

அறிமுகம்

குழந்தைகள் வரையும் ஓவியத்தை உற்று நோக்கினால், பறவைகள் சில பறந்து கொண்டிருக்கும், மலைகள் முக்கோணமாக உயர்ந்திருக்கும், நதிகள் நீல வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கும். இவற்றிலெல்லாம் ஏதோவொரு ஒழுங்கு மறைந்திருக்கும். ஆனால் பச்சை நிறத்தில் மரங்களும் செடிகளும் கொடிகளுமென காடுகள் ஒழுங்கற்று கிறுக்கப்பட்டிருக்கும். இந்த பூமி குழந்தைகள் வரைகிற ஓவியமாக பத்திரப்படுத்தப்பட வேண்டுமென்பது வாழை குமார் போன்ற சூழலியலாளர்களின் அக்கறை. - கவிஞர். சக்திஜோதி

Comments

Popular posts from this blog

பறவைக் குறிப்புகள்

நீர்ப் பறவைகள், ஊர்ப் பறவைகள், மலைப் பறவைகள், பனிப் பறவைகள், புல்வெளிப் பறவைகள், சதுப்புநிலப் பறவைகள், மேற்படி எல்லா சூழ்நிலைகளையும் தகவமைத்து வாழ்கிற பறவைகளும் என இப்பூமியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய 1400 பறவைகளும் தமிழகத்தில் 510 பறவைகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பறவைகள் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அழிந்துபோன பறவைகள் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கக்கூடும். வெறும் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவிற்குள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிற பறவையினங்களும், ஆண்டுக்கு சுமார் 30000 கிலோமீட்டர் வரை பறந்து வாழ்கிற பறவைகளும் இவ்வுலகில் உண்டு. காலை நடை உடலை உறுதி செய்கிறது. பறவை நடை மனதையும் சேர்த்தே உறுதி செய்கிறது. காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை இரண்டு மணி நேர பறவை நடையில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை இனங்கண்டு உறுதி செய்யலாம். பொதுவாக மனித குடியிருப்புகளையொட்டி இருக்கும் பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படக்கூடியவை. அவை ஊர்ப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் இந்தியா முழுமையும் விரிந்திருக்கின்றன. தொடர்ந்து பறவ...

மரங்கள் : சில முரண்கள்

நொடிக்கொருமுறை கரியமிலவாயுவை வெளியிட்டு பிராண வாயுவை சுவாசிக்கும் மனித உடல் எந்நேரமும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறான செயல்பாடே விலங்கின் உடலிலும் செவ்வனே நடந்து கொண்டிருந்தாலும் மனிதனைப் போலல்லாமல் குறைந்த அளவேயான கரியமிலவாயுவையே வெளியிடுகின்றன. இப்படியாக நொடிக்கொருமுறை மனித உடல் வெளியிடும் அதிகப்படியான கரியமிலவாயுவையும்ரூபவ் மனிதன் நடத்துகின்ற பெருந்தொகையிலான ஆலைகளிலிருந்து வெளிவரும் மிகவும் அதிகப்படியான கரியமிலவாயுவையும் உள்ளீர்த்துக் கொண்டுரூபவ் அதே மனிதன் உயிர் வாழ முதல் தேவையான பிராணவாயுவை இப்பூமி முழுவதும் பரவச் செய்யும் மரங்கள்தான் தாய்மார்களுக்கெல்லாம் தாய் என்றால் மிகையில்லை. மரங்கள் மிகுந்திருக்கும் காடுகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அழிவுக்குள்ளாகி வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே; உலகின் அனைத்துவித காடுகளும் அழிவுக்குள்ளாக ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்த அறிவியலின் அசூர வளர்ச்சிக்கும் மக்களின் பெரும் முன்னேற்றத்திற்கும் மேலைத்துவ அறிவியலே காரணமாக அமைந்தாலும்ரூபவ் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் அதுவே முதன்மைக் க...

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...