Skip to main content

Posts

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...
Recent posts

பூனைகளின் உலகம்

முன்பொரு பூனை வளர்த்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு. அப்பூனை ஆணா பெண்ணா என்றே தெரியாது. சில மாதங்கள் கழித்தே ஒருவாறு அது ஆண் பூனை என்று யூகித்துக் கொண்டோம். அதற்கு நாங்கள் இட்ட பெயர் வரி. பெயருக்குதான் அது பூனையே தவிர எங்களுடன் பழகுவதில் நாய் போல. ஆனால் அதனிடம் எஞ்சியிருந்தது என்னவோ புலியின் குணம். நாங்கள் குடியிருந்த இரண்டு தெரு மக்களின் அன்பையும், இரண்டு தெருக்களின் எல்லையை இறுமாப்புடன் நிர்வகித்த ஒரு நாயின் அன்பையும் சேர்த்தே பெற்றிருந்தது எங்கள் பூனை. நாயோடு சகவாசம் பூனைகளின் உலகில் அதற்கு ஒரு புதுத் தெம்பை அளித்திருக்கலாம். நாயைப் போலவே தன் எல்லையை அந்த இரண்டு தெருக்களோடு நிர்ணயித்துக் கொண்டது. தன் எல்லைக்குள் ஒரு கறுப்பு நிற பெண் பூனையை மட்டுமே தன் இணையாக ஏற்று அனுமதித்தது. அதன்பின் தன் எல்லையை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். அதுவும் ஒரு இணையை ஏற்ற பிறகு தெருவின் இங்கு இடுக்களிலும் கூட கண் வைத்து இரவு பகல் பாராமல் பாதுகாத்தது. மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஒரு ஆளாய் வளர்ந்து வந்த வரிக்கு, ஒருநாள் எதிர்பாராமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனை கூட்டிச்...

இயற்கை செய்திகள் சிந்தனைகள்:

இயற்கையை வெறும் செய்திகளாக மட்டுமே படித்தும், பார்த்தும், பழகியும் வந்தவர்களுக்கு அச்செய்திகளைக் கொண்டே கூரிய சிந்தனைகளை விதைப்பது எவ்வளவு கடினம் என்பது இயற்கையை வாழ்க்கைக்கல்வி பாடத்தோடு இணைத்தபோதும், வாழ்க்கையிலிருந்தே இயற்கையை அகற்றிவிட்டவர்களுக்கு மத்தியிலும், இயற்கையை பண்பாடு, பாரம்பரியம், வாழ்வுப் பிரச்சனையோடு தொடர்பு படுத்தி உணர்ச்சிமய கொந்தளிப்போடு உலவுபவர்களுக்கு மத்தியிலும் இயற்கையைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்பது ச.முகமது அலியோடும் அவரது எழுத்துக்களோடும் இணைந்து பயணிக்கையில்தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அத்தனை எளிது அவர் சிந்தனைகளைப் பற்றிக் கொள்வது. என்ன செய்வது பற்றிக் கொள்ளத்தான் யாரும் தீக்குச்சியாக இருப்பதில்லை இங்கு. ச.முகமதுஅலியின் எழுத்துக்களை வாசிப்பவர் எவரும் பற்றிக் கொள்வார்கள் என்பது கண்கூடு. இதோ இந்நூலில் காட்டுத் தீ பற்றிய ஒரு செய்தி. வட அமெரிக்காவின் காடுகளில் இடி மின்னல் ஆகியவற்றால் மட்டும் ஆண்டுக்கு 7000 தீ விபத்துகள் ஏற்படுகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை காடுகளில் இடி, மின்னல்களால் இயற்கையாகத் தீப்பிடிப்பதில்லை. அனைத்து...

மரங்கள் : சில முரண்கள்

நொடிக்கொருமுறை கரியமிலவாயுவை வெளியிட்டு பிராண வாயுவை சுவாசிக்கும் மனித உடல் எந்நேரமும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறான செயல்பாடே விலங்கின் உடலிலும் செவ்வனே நடந்து கொண்டிருந்தாலும் மனிதனைப் போலல்லாமல் குறைந்த அளவேயான கரியமிலவாயுவையே வெளியிடுகின்றன. இப்படியாக நொடிக்கொருமுறை மனித உடல் வெளியிடும் அதிகப்படியான கரியமிலவாயுவையும்ரூபவ் மனிதன் நடத்துகின்ற பெருந்தொகையிலான ஆலைகளிலிருந்து வெளிவரும் மிகவும் அதிகப்படியான கரியமிலவாயுவையும் உள்ளீர்த்துக் கொண்டுரூபவ் அதே மனிதன் உயிர் வாழ முதல் தேவையான பிராணவாயுவை இப்பூமி முழுவதும் பரவச் செய்யும் மரங்கள்தான் தாய்மார்களுக்கெல்லாம் தாய் என்றால் மிகையில்லை. மரங்கள் மிகுந்திருக்கும் காடுகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அழிவுக்குள்ளாகி வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே; உலகின் அனைத்துவித காடுகளும் அழிவுக்குள்ளாக ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்த அறிவியலின் அசூர வளர்ச்சிக்கும் மக்களின் பெரும் முன்னேற்றத்திற்கும் மேலைத்துவ அறிவியலே காரணமாக அமைந்தாலும்ரூபவ் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் அதுவே முதன்மைக் க...

பறவைக் குறிப்புகள்

நீர்ப் பறவைகள், ஊர்ப் பறவைகள், மலைப் பறவைகள், பனிப் பறவைகள், புல்வெளிப் பறவைகள், சதுப்புநிலப் பறவைகள், மேற்படி எல்லா சூழ்நிலைகளையும் தகவமைத்து வாழ்கிற பறவைகளும் என இப்பூமியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய 1400 பறவைகளும் தமிழகத்தில் 510 பறவைகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பறவைகள் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அழிந்துபோன பறவைகள் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கக்கூடும். வெறும் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவிற்குள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிற பறவையினங்களும், ஆண்டுக்கு சுமார் 30000 கிலோமீட்டர் வரை பறந்து வாழ்கிற பறவைகளும் இவ்வுலகில் உண்டு. காலை நடை உடலை உறுதி செய்கிறது. பறவை நடை மனதையும் சேர்த்தே உறுதி செய்கிறது. காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை இரண்டு மணி நேர பறவை நடையில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை இனங்கண்டு உறுதி செய்யலாம். பொதுவாக மனித குடியிருப்புகளையொட்டி இருக்கும் பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படக்கூடியவை. அவை ஊர்ப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் இந்தியா முழுமையும் விரிந்திருக்கின்றன. தொடர்ந்து பறவ...

அழியும் பேருயிர்: யானைகள்

ச.முகமதுஅலியின் நெருப்புக்குழியில் குருவி படித்த பின்னும், இது போன்ற அரிய வெளியீடுகளை, சிறுபத்திரிக்கையின் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காமல் போனால், எதிர்வருகிற மனிதகுல அழிவுக்கு நாமும் ஒரு காரணமாகிவிடுவோம் என்கிற அச்சத்துடனேயே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்தப் பூமியில் உயிர் வாழ்கின்ற எந்தவொரு உயிரினமும் உணவுச்சங்கிலியைக் கொண்டே சுழல்கிறது எனும் போது, காட்டுயிர்கள் அழியும்பட்சத்தில் மனிதகுலம் மட்டும் தலைத்துவிடுமா என்ன? இந்தச் சிறு புரிதல்கூட நமக்கு இல்லாது போனது ஏன்? என்பதை விரிவாக அலசுகிறது இந்நூல். சமீபத்திய செய்தி ஒன்று இப்படி! இந்தியாவின் குஜராத்தில் மட்டுமே உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 500 லிருந்து 550 சிங்கங்களாக உயர்ந்திருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் சிங்கங்கள் இருந்தன என்று படிக்கும்போது, காட்டுயிர் பாதுகாப்பில் நாம் எவ்வளவு பெரிய படுபாதகமான செயலைச் செய்துவிட்டு, எவ்விதச் சத்தமும் இல்லாமல் நகர்ந்து வந்திருக்கிறோம். நம்பாட்டுக்கு கதையளந்து, குடி மயக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். இது தனக்குத் தானே வைத்து...

பாலூட்டிகளின் கதைகள்

பாலூட்டிகளின் கதைகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. அப்படி வந்திருந்தால் அழிவின் விளிம்பிலிருக்கும் சில அப்பாவி விலங்குகளையாவது நம்மால் காப்பாற்றியிருக்க முடியும். உதாரணம் தேவாங்கு உள்ளிட்ட மரநாய்கள், புனுகுப்பூனைகள் போன்றவை. ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவலட்சணம் என்று கருதி தேவாங்கின் மிகச் சரியான எடை சொல்லும் வேட்டையாடியைச் சந்தித்தேன். அச்சுப் பிசகாமல் இந்தப் புத்தகத்தில் உள்ளதுபடியே 150 - 300 கிராமைத் தாண்டாது என்றார். இத்தனைக்கும் தேவாங்குகள் பத்து வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மலைப்பகுதிகள், அதனைச் சுற்றியுள்ள சிறு சிறு குன்றுப் பகுதிகளில் கூட சகஜமாக காணப்பட்டவைதான். இப்போது அவை அருகிவிட்டன. அப்படியே மரநாய்களும் புனுகுப்பூனைகளும் அருகிவிட்டன. அதனால்தான் அந்தந்த காலத்திற்கேற்ப சூழலுக்குரிய புத்தகங்கள் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று விரும்புவது. அந்நிலை தமிழகத்தில் இல்லாது போனதன் விளைவுதான் இன்று மிக அரிய விலங்கினங்களாக அவற்றைக் கருதும் துர்பாக்கிய நிலை நமக்கு வந்திருக்கிறது. பாலூட்டிகளின் கதைகள் புத்தகம் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இன்னொர...