நொடிக்கொருமுறை கரியமிலவாயுவை வெளியிட்டு பிராண வாயுவை சுவாசிக்கும் மனித உடல் எந்நேரமும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறான செயல்பாடே விலங்கின் உடலிலும் செவ்வனே நடந்து கொண்டிருந்தாலும் மனிதனைப் போலல்லாமல் குறைந்த அளவேயான கரியமிலவாயுவையே வெளியிடுகின்றன. இப்படியாக நொடிக்கொருமுறை மனித உடல் வெளியிடும் அதிகப்படியான கரியமிலவாயுவையும்ரூபவ் மனிதன் நடத்துகின்ற பெருந்தொகையிலான ஆலைகளிலிருந்து வெளிவரும் மிகவும் அதிகப்படியான கரியமிலவாயுவையும் உள்ளீர்த்துக் கொண்டுரூபவ் அதே மனிதன் உயிர் வாழ முதல் தேவையான பிராணவாயுவை இப்பூமி முழுவதும் பரவச் செய்யும் மரங்கள்தான் தாய்மார்களுக்கெல்லாம் தாய் என்றால் மிகையில்லை.
மரங்கள் மிகுந்திருக்கும் காடுகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அழிவுக்குள்ளாகி வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே; உலகின் அனைத்துவித காடுகளும் அழிவுக்குள்ளாக ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்த அறிவியலின் அசூர வளர்ச்சிக்கும் மக்களின் பெரும் முன்னேற்றத்திற்கும் மேலைத்துவ அறிவியலே காரணமாக அமைந்தாலும்ரூபவ் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் அதுவே முதன்மைக் காரணமானது. இருப்பினும் மேலைத்துவ அறிவியலே என்றும் சிறந்தது என்பதற்கிணங்க சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினை அகற்றுவதற்கான முன்மொழிவையும் செயல்பாட்டையும் அதுதான் எடுத்தது. அறிவியலில் ஏது மேலைத்துவம் என்று கேட்கலாம்.
பலருக்கும் இன்று மேலைத்துவம் என்றதுமே ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் மேலைத்துவ அரசியலை அறிவியலோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறார்கள். இங்கு ரஷ்யார ஜெர்மன் இங்கிலாந்து அமெரிக்கா என இன்னும் பிற மேற்குநாடுகளின் சிந்தனையின்படி எதையும் அறிவியல் கண்கொண்டு பார்ப்பதுவே மேலைத்துவ அறிவியல். அந்த மேலைத்துவ அறிவியலை வரவேற்பதுதான் உலகநாடுகளுக்கு சாலச்சிறந்ததாகும். மற்றபடி மேலைத்துவ அதிகாரச் சிந்தனை ஏகாதிபத்தியம்; சுரண்டல்; இந்தப் பூமிக்கு தான்தான் அத்தாரிட்டி என்பதெல்லாம் மனித குலத்திற்கும் அவன் வாழ்வுரிமைக்கும் ஏற்புடையன அல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்னும் விளக்க வேண்டுமானால் அணுவின் பூச்சிக்கொல்லியின் அதீத கார்பனின் நன்மை தீமைகளை அறிந்ததும் உடனே அதை விலக்கியதும் மேலைத்துவ அறிவியல்தான். ஏகாதிபத்தியப் போர்களுக்கும் பூச்சிக்கொல்லி இன்னபிற தடை செய்யப்பட்ட மருந்துகளுக்கும் கார்பனைக் குறைக்காமல் இறுமாப்பு செய்வதுமான அடாவடித்தன்மைக்கும் மேற்கண்டவற்றை மூன்றாம் உலக நாடுகளின் மீது வலிந்து திணிக்கின்ற சுரண்டலுக்கும் மேலைத்துவ அரசியலே காரணமேயன்றி மேலைத்துவ அறிவியல் அல்ல என்பதை உணரவேண்டும். அறிவியல் என்பது அறிவியல் மட்டுமே என்று சிந்திக்க வேண்டும்.
சரி… காடுகளுக்கு வருவோம். மிக விரைவாக அழிந்துவரும் காடுகளின் பரப்பளவும் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகே வெளிப்பட ஆரம்பித்தன. அது 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாட்டின் போதுதான் உச்சநிலையை அடைந்தது. அங்குதான் மூன்றாம் உலக நாடுகள் சுற்றுச்சூழலை பாழ்படுத்திவரும் மேற்கத்திய வல்லரசு நாடுகளை எதிர்த்து விமர்சனங்களை எழுப்பின. அம்மாநாடே உலக நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வையும் பாதுகாப்புணர்வையும் ஏற்படுத்தியது. அம்மாநாட்டின் விளைவாக 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே காடுகள் வளர்ப்பு பெருக்கத்திட்டம் கார்பன் குறைப்பு புவிவெப்பமயமாதல் வனஉயிர்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உலகின் எல்லா நாடுகளிலும் விவாதிக்கப்பட்டு முக்கியத் திட்டமாக விளங்கியது. ஆனாலும் சுற்றுச்சூழல் பற்றிய போதிய ஆர்வமின்மையாலும் காடுகளைச் சுரண்டி லாபங்கொழிக்கும் சுயநலவாதிகளாலும் பல நாடுகளில் பல திட்டங்கள் கோப்பளவிலேயே முடங்கிப் போயின. அதில் இந்தியாவும் அடங்கும் என்பதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றாலும் ஒருவகையில் 1972 ஆம் ஆண்டு நமக்குச் சிறப்பு வாய்ந்ததுதான். இந்தியாவின் வனத்துறைச் சட்டங்கள் மேம்படுத்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் ஓரளவு காடுகள் பாதுகாப்பிற்கும் 1972 ஆம் ஆண்டு வனப்பாதுகாப்புச் சட்டம்தான் வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் காடுகள் வளர்ப்பு வனஉயிர்கள் பாதுகாப்பு என்பது… வீட்டுச் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதாகவும் மரங்கள் நடுவதாகவும் எகோ டூரிஸம் என்பதுமாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று மூலை முடுக்கெல்லாம் பல இயக்கங்களும் அறநிறுவனங்களும் தோன்றி சுற்றுச்சூழல் பற்றி பேசி வருகின்றன. குறிப்பாக அவற்றின் கொள்கை என்பது வெறும் மரம் நடுதல் மட்டுமே. அதுவும் விளம்பரங்களுக்காகவும் நிறுவன வளர்ச்சிக்காகவுமே செய்யப்படுகிறது எனும்போது வேதனைப்படுவதைத் தவிர வேறு வழியேயில்லை.
நம் தமிழகச் சுற்றுச்சூழலைப் கொஞ்சம் பார்த்தோமானால் திருமணத்திற்கும் இழவுக்கும் திருவிழாவுக்கும் அரசியல் கூட்டங்களுக்குமென எந்நிகழ்ச்சியானாலும் மது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது போல இன்று மரம் நடுதலும் சாலையில் ஒன்று தெருவில் ஒன்று வீட்டில் ஒன்று பள்ளியில் ஒன்று அலுவலகத்தில் ஒன்றென பார்க்கும் இடமெல்லாம் மரத்தை நட்டு வைப்பவர்களுக்கு முக்கிய நோக்கம் ஒன்று உள்ளது. அது நிழல்… நிழல்… நிழல்..! வேறு ஏதேனும் உள்நோக்கம் உண்டா என்று கேட்டால் உண்டு. காற்று… காற்று… காற்று..! மிஞ்சிப் போனால் எல்லோரும் ஒரே கோரஸாக புவிவெப்பமயம். வேறென்ன? மரங்களை நட்ட இடமெல்லாம் சில மாதங்களாவது சுற்றிச் சுற்றி வந்து பார்வையிட்டிருந்தால் கூட சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று கருதலாம். ஆனால் மரம் நட்ட கையோடு காலாவதியாகிவிடுகிற பல இயக்கங்களின் கதைகளே விரவிக் கிடக்கின்றன இங்கு.
வார்தா புயல் இன்று சென்னையிலுள்ள அனைத்து மரங்களையும் வேரோடு சாய்த்துவிட்டது. மரம் நடும் இயக்கங்கள் இயற்கையின் செயலிலிருந்து என்ன பாடம் கற்கப் போகின்றன? செங்கலபட்டிலிருந்து சென்னை வரை சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு புறங்களிலுமிருந்த சாலையோர மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிட்டன. சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்ட போது எழுந்த கண்டனக்குரல்கள் இன்று இயற்கையின் செயல் முன் வாய் திறக்க முடியாமல் போனது. இத்தனைக்கும் இம்மரங்களினால்தான் அத்தனை சேதமும். ஆனால் இம்மரங்கள்தான் பெருஞ்சேதத்தை பாதியாக குறைத்தது என்கிற சால்ஜாப்பு வேறு. இங்கு அடுக்குமாடி கட்டிடங்கள் காற்றுப் புகா வண்ணம் நெரிசலான கட்டிடங்கள் விண்ணுயர அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்ற லாப வெறிகளெல்லாம் மi(ற)க்கடிக்கப்பட்டுவிட்டன
தற்போது வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் சாய்ந்த மரங்களை மீண்டும் நடும் பணி துவங்கிவிட்டது. ஆனால் அப்படி நடு;ம்போது 30 சதவீத மரங்கள் பிழைப்பதற்கே வாய்ப்புகள் மிகக்குறைவு. மேலும் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் இப்பணி நடைபெறுவதே இயலாமல் போகும் நிலையும் உள்ளது.
இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் ஏற்கனவே அழிக்கப்பட்ட காடுகளை புத்துயிர்க்கச் செய்து இயற்கைச் சமன்நிலைக்கு கொண்டு வருவதேயாகும். தமிழகத்தில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காப்புக்காடுகள் மரங்களின்றி இருக்கின்றன. ஒருபுறம் பாதுகாக்கப்பட்ட காடுகள் கூட அழிக்கப்பட்டு பயிர்ச் சாகுபடிக்கு தயார் செய்யப்படுகின்றன. ஆகவே அதுகுறித்து சிந்தித்து அங்கெல்லாம் மரங்களை நட்டு காடுகளின் பரப்பை அதிகரிக்கச் செய்வதே நாம் இயற்கைக்குச் செய்யும் கடமையும் நமக்கு நாமே செய்து கொள்ளும் பணிவிடையும் ஆகும். அதைவிடுத்து இயற்கையின்பால் இருக்கிற குறைந்தபட்ச நேசத்தையும் கூட்டிணைவையும் சிந்தனைகளையும் வீட்டுக்கொரு மரம் நடுதல் சாலையோரங்களில் மரம் நடுதல் போன்ற அவசியமல்லாத கூட்டங்களுக்காக மனிதனது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பது நமது முட்டாள்தனமே ஒழிய வேறொன்றுமில்லை.
அதாவது வீட்டில் வளர்க்கும் விலங்கு நேயத்திற்கும் காடுகளில் வாழும் காட்டுயிர்கள் நேயத்திற்கும் மிகுந்த இடைவெளியும் வேறுபாடும் உண்டு. பல்லுயிர் செழிப்பிற்கும் இயற்கை சமன்நிலைக்கும் ஒருபோதும் நம்முடைய வீட்டுவிலங்கு நேயம் பயன்படாது என்பதைப் போலவே காடுகள் விரிவாக்கத்திற்கும் ஊர்புறங்களில் மரம் நடுவதால் பயன் ஏதும் விளையப் போவதில்லை.
தமிழகத்தின் மத்தியிலிருந்து மேற்குவரைக்கும் உட்பட்ட நிலங்கள் பரந்த புல்வெளிகளையுடையது. அந்த நிலத்திற்கே உரிய சில புள்ளினங்கள் அந்தப் பகுதியில் வாழும். அப்படித்தான் இன்று தமிழகத்திலிருந்து முற்றிலும் அற்றுப் போய்விட்ட கானமயில்கள் இந்தப் பரந்த புல்வெளியில் பார்க்கும் இடமெல்லாம் காணப்பட்ட பறவைதான். இன்று விவசாயம் என்கிற பெயரிலும் நிலத்தைப் பண்படுத்துகிறோம் என்ற பெயரிலும் அந்நிலத்திற்கு சம்பந்தமேயில்லாத பல்வேறு மரங்களையும் பல்வேறு பயிர்களையும் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் நட்டு அப்புல்வெளி பிரதேசத்தை அழித்துவிட்டோம். அதைப் போலவே சிவிங்கிப்புலி (சீட்டா) வாழ்ந்த காடுகளையொட்டி பரந்த புல்வெளி சார்ந்த புதர்க்காடுகள் அழிக்கப்பட்டதாலும் சிவிங்கிப்புலி தமிழகத்திலிருந்து ஏன் இந்தியாவிலிருந்தும் அற்றுப் போய் 70 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்று ச.முகமது அலி கூறுவதை எந்த வெகுஜனமாவது ஏற்றுக்கொள்ளுமா? அதனால் இனிமேலாவது இயற்கையை அறிவியல் கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு இயற்கை சமன்நிலையில் முக்கிய அங்கம் வகிக்கும் காடுகளையும் மரங்களையும் வளர்த்தெடுக்கும் பணியை செவ்வனே திருந்தச் செய்ய வேண்டும்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...
Comments
Post a Comment